துபாயில் இந்திய நிறுவன ஊழியர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி ( தினமலர் வாசகர் முதுவை ஹிதாயத்)
துபாய்: துபாயில் உள்ள மிகப் பெரிய இந்திய நிறுவனமான ஈ.டி.ஏ., அஸ்கான் நிறுவனத்தின் ஒரு அங்கமாக விளங்கும் ஜீனத் குரூப் கம்பெனியின் ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு குறித்த பயிற்சி வகுப்பு, எம்.பி.எம். தொழிலாளர் முகாமின் பொதுக் கூட்ட அரங்கில் ஜீனத் குரூப் மேலாளர் மஹமூத் சேட் தலைமையில் நடைபெற்றது. பாதுகாப்பின் அவசியம் மற்றும் நிறுவனத்தின் சார்பில் ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நலத் திட்டங்கள் குறித்து அவர் எடுத்துரைத்தார். பாதுகாப்பு அதிகாரி சர்மா பேசுகையில், பணியின்போது பாதுகாப்புடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை விவரித்தார். இத்தகைய திட்டங்களுக்கு ஊழியர்கள் ஒத்துழைக்க வேண்டியதன் அவசியத்தை வற்புறுத்திய அவர் தற்போதைய கடும் கோடை நிலவுவதால் வாகனங்களை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பதையும் விளக்கினார். பயிற்சி முகாமில் தொழில் நுட்ப அதிகாரி ஜஸ்வீர் சிங், முகமது இக்பால், கலந்தர் நெய்னா முகமது, யாகூப் ஹாசன், முகமது சத்தார், பைசல் உள்ளிட்ட பலர் பேசினர்.
http://www.dinamalar.com/Ulagatamilargal/2007aug02/main.asp
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment