Thursday, August 2, 2007

துபாயில் இந்திய நிறுவன ஊழியர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி ( தினமலர் வாசகர் முதுவை ஹிதாயத்)

துபாயில் இந்திய நிறுவன ஊழியர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி ( தினமலர் வாசகர் முதுவை ஹிதாயத்)

துபாய்: துபாயில் உள்ள மிகப் பெரிய இந்திய நிறுவனமான ஈ.டி.ஏ., அஸ்கான் நிறுவனத்தின் ஒரு அங்கமாக விளங்கும் ஜீனத் குரூப் கம்பெனியின் ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு குறித்த பயிற்சி வகுப்பு, எம்.பி.எம். தொழிலாளர் முகாமின் பொதுக் கூட்ட அரங்கில் ஜீனத் குரூப் மேலாளர் மஹமூத் சேட் தலைமையில் நடைபெற்றது. பாதுகாப்பின் அவசியம் மற்றும் நிறுவனத்தின் சார்பில் ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நலத் திட்டங்கள் குறித்து அவர் எடுத்துரைத்தார். பாதுகாப்பு அதிகாரி சர்மா பேசுகையில், பணியின்போது பாதுகாப்புடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை விவரித்தார். இத்தகைய திட்டங்களுக்கு ஊழியர்கள் ஒத்துழைக்க வேண்டியதன் அவசியத்தை வற்புறுத்திய அவர் தற்போதைய கடும் கோடை நிலவுவதால் வாகனங்களை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பதையும் விளக்கினார். பயிற்சி முகாமில் தொழில் நுட்ப அதிகாரி ஜஸ்வீர் சிங், முகமது இக்பால், கலந்தர் நெய்னா முகமது, யாகூப் ஹாசன், முகமது சத்தார், பைசல் உள்ளிட்ட பலர் பேசினர்.

http://www.dinamalar.com/Ulagatamilargal/2007aug02/main.asp

Wednesday, August 1, 2007

வளைகுடா நாடுகளில் பணி புரியும் பெண்களுக்கு உதவ புதிய வசதி (தினமலர் வாசகர் முதுவை ஹிதாயத்)

வளைகுடா நாடுகளில் பணி புரியும் பெண்களுக்கு உதவ புதிய வசதி (தினமலர் வாசகர் முதுவை ஹிதாயத்)

துபாய்: வளைகுடா நாடுகளில் வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு உதவ அந்த பகுதிகளில் உள்ள இந்திய துõதரகங்களில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய போன் வசதியுடன் கூடிய உதவி மையத்தைத் திறக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

வளைகுடா பகுதிகளில் வீட்டு வேலை செய்யும் இந்திய பெண்கள், அவர்கள் வேலை செய்யும் வீட்டு நபர்களால் துன்புறுத்தப்படுவதாக புகார்கள் வந்ததைத் தொடர்ந்து வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அமைச்சரகம் இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்த அமைச்சகத்தின் செயலாளர் நிர்மல் சிங் தெரிவித்தார். செப்டம்பர் 1ம் தேதி முதல் துவங்க இருக்கும் இந்த புதிய வசதிக்கான நடைமுறைகள் வகுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். இது குறித்து துபாயில் உள்ள இந்திய துõதர் வேணு ரங்கசாமி கூறுகையில், இந்த புதிய வசதி குறித்து இதுவரை இந்திய அரசிடமிருந்து கடிதம் ஏதம் வரவில்லை; ஆனால் நாங்கள் ஏற்கனவே 24 மணி நேரமும் இயங்கும் டெலிபோன் தகவல் மைய வசதியை ஏற்படுத்தியுள்ளோம். 050 9433111 என்ற எண்ணுக்கு எந்த ஒரு இந்தியரும் தொடர்பு கொண்டு உதவி கோரினால் உடனே அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று அவர்களுடைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பர் என்றார்.

02. குரான் விருது விழா (தினமலர் வாசகர் முதுவை ஹிதாயத்)

துபாய்: துபாயில் நடைபெற உள்ள துபாய் சர்வதேச புனித குரான் விருது விழாவில் பங்கு பெற 40 நாடுகளும் அமைப்புகளும் பங்கேற்க முன் வந்துள்ளன. இந்த விருதுக்கான ஏற்பாட்டுக்குழு கூட்டம் அதன் தலைவர் இப்ராகிம் பு மெல்ஹா தலைமையில் அல் தல்வார் மையத்தில் நடைபெற்ற போது இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.


http://www.dinamalar.com/Ulagatamilargal/2007july24/main.asp